Tuesday 14 February 2012

அசினின் ஆசை...!



பொதுவாக நடிகைகள் ஓரிரு படங்களில் நடித்து பெரிய நடிகையாகிவிட்டால் அடுத்து அந்த நடிகைகள், குறிப்பிட்ட சில நடிகர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்று அந்த நடிகர், இந்த நடிகர் என்று ஒரு லிஸ்ட் போடுவார்கள். அந்தவகையில் ஏற்கனவே கமல்ஹாசனுடன் தசாவதாரம் படத்தில் நடித்த அசின், மீண்டும் அவருடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். டைரக்டர் ஷங்கர் மீண்டும் கமலை வைத்து ஒரு படத்தை இயக்கப்போவதாகவும், அந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக அசின் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அசின் கூறியதாவது, இதுபோன்ற செய்தி வெறும் யூகம் தான். பட விழாக்களில் ஷங்கரை நிறைய முறை சந்தித்து இருக்கிறேன். அப்போது இருவரும் பல விஷயங்களை பேசியிருக்கிறோம். இதுதவிர பேஸ்புக்கிலும் நாங்கள் பேசிக்கொள்வோம். மற்றபடி கமல் ஜோடியாக நடிப்பது பற்றி என்னிடம் அவர் எதுவும் பேசியதில்லை. ஒருவேளை அப்படி‌யொரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் கமலுக்கு ஜோடியாக நிச்சயமாக நடிப்பேன், மறுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

Dhoni Story....

 Subramaniam (Prakash Raj) is a lower middle class widower with two kids. He always runs for money doing all sorts of works right from dawn to dusk to bring up his daughter Kaveri (Sriteja) and Karthik (Akash). He wishes to give them good education. He wants to see his son to be an MBA graduate.
Karthik is a 14-year old son of Subramaniam. Karthik wants to become a good cricketer. His inspiration is Dhoni and like him, he wants to be an attacking wicket keeper- batsman.
While Subramaniam joins him in a good school, Akash fails in most of the subjects. However, his cricket coach (Nazar) is in all praise, as Karthik played the major role in winning a cricket tournament.
Kaveri often spends time with Nalini (Radhika Apte). Accidentally, Subramaniam gets to know that Nalini earns her living through prostitution and strictly orders his daughter to stay away from her. As Karthik was poor in studies, the principal tells Subramaniam to take his son out.
Immediately Subramaniam takes Karthik away from cricket coaching and made him to go a series of tuition classes. Karthik fails to cope up with studies even after leaving cricket, which makes Subramaniam to lose his patience and beats him up and injures his head for which he gets arrested. What happens next should be seen on-screen.

நடிகை குஷ்பு மனு தாக்கல்...

தேர்தல் விதிகளை மீறியதாக நத்தம் போலீசார் போட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகை குஷ்பு மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த சட்டசபை தேர்தலின்போது நடிகை குஷ்பு திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். நத்தம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட விஜயனை ஆதரி்தது அப்பகுதியில் பிரச்சாரம் செய்தார். அவரது பிரச்சாரத்தின்போது தேர்தல் விதிகள் மீறப்பட்டதாகக் கூறி நத்தம் போலீசார் குஷ்பு மற்றும் திமுக வேட்பாளர் விஜயன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு நத்தம் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் நடந்த விசாரணையின்போது நடிகை குஷ்பு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்து அங்கிருந்து காரில் சென்று நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்நிலையில் குஷ்புவும், விஜயனும் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,

கடந்த ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி நத்தம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தின்போது தேர்தல் விதியை மீறியதாக எங்கள் மீது நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான புகாரின்பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

Friday 10 February 2012

தனுஷ் - சிம்பு மோதல்!

தனுஷும் சிம்புவும் வெளியில் சிரித்துப் பேசி கட்டிப் பிடித்து போஸ் கொடுத்தாலும், உள்ளுக்குள் அப்படி இல்லை என்பது கோலிவுட் அறிந்த சமாச்சாரம்.

கொஞ்ச நாள் அடங்கியிருந்த இவர்களின் பகை, மீண்டும் புகைய ஆரம்பித்துள்ளது, ட்விட்டர் வழியாக.

சமீபத்தில் சச்சின் டெண்டுல்கருக்காக ஒரு பாடலை உருவாக்கியிருந்தார் தனுஷ். இந்தப் பாடல் யு ட்யூபில் வெளியானது. ஆனால் சில மணி நேரங்களில் அந்தப் பாடலை யுட்யூப் நீக்கிவிட்டது. அதற்குள் 4.5 லட்சம் பேர் அந்த வீடியோவைப் பார்த்துவிட்டிருந்தனர்.

உடனே தனுஷ், "அடுத்தவர் துன்பத்தைப் பார்த்து சிலர் சிரித்து மகிழ்கிறார்கள். மனித இனம் அன்பு செலுத்த படைக்கப்பட்டது என்ற உண்மை புரியாத அவர்களைப் பார்த்து நான் சிரிக்கிறேன்," என்று ட்வீட் செய்திருந்தார்.

உடனே சிம்பு தனது ட்விட்டரில், "காப்பி அடிக்கிறதுல சீனாவை விட பயங்கரமா இருக்காங்களே," என்று ட்வீட் பண்ணியிருந்தார்.

அடுத்த சில நிமிடங்களில் தனுஷ்: "பிரதர், அந்தப் பாட்டை சச்சினுக்காக இலவசமாதான் செய்து கொடுத்தேன். பாடல் உருவாக்கத்துக்கான செலவு மட்டும் பூஸ்ட் நிறுவனம் கொடுத்திருக்கு," என்று கூறியிருந்தார்.

உடனே பதிலுக்கு சிம்பு, "உலகில் யாரும் யாருக்கும் எதிரியில்லை. வெற்றிதான் ஒருவரை உலகுக்கு காட்டுகிறது. தோல்வியோ உலகை உனக்குக் காட்டுகிறது," என தத்துவமழை பொழிந்திருந்தார்.

"போங்கப்பா... பொழப்பை சரியா பாருங்க... இல்லன்னா உங்களை ஒருத்தனும் பார்க்க மாட்டான்" - இது குறுக்கில் புகுந்த ஒரு ரசிகரின் கமெண்ட்!

இதெப்டி இருக்கு!

சூர்யாவுடன் நடிப்பதில் பிரச்சினையில்லை! - விஜய்

சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சினையுமில்லை. விரைவில் வாய்ப்பு வந்தால் நடிப்பேன், என்றார் நடிகர் விஜய்.

மதுரையில் நண்பர் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டரில் ரசிகர்கள் முன்னிலையில் நடிகர் விஜய் தோன்றிப் பேசினார்.

பின்னர் மதுரை காளவாசலில் உள்ள ஓட்டலில் நடந்த விழாவில் கே.கே.நகரில் உள்ள ஷைன் மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவ-மாணவிகளுடன் நடிகர் விஜய் கலந்துரையாடினார். அப்போது மாணவர் அசோக் தான் வரைந்த ஓவியத்தை நடிகர் விஜய்க்கு வழங்கினார். விழாவில் ஆதரவற்ற பெண்கள் 2 பேருக்கு தொழில் தொடங்க நிதி உதவி வழங்கினார் விஜய்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "அரசியல் சம்பந்தமான கேள்விகள் இப்போது வேண்டாம். தற்போது சினிமா பற்றி மட்டும் பேசலாம்.

நண்பன் படத்தின் கதை போல அமைந்தால் நிச்சயம் மற்ற ஹீரோக்களுடன் சேர்ந்து நடிப்பேன். ஒரு படத்திற்கு கதை, திரைக்கதை தான் ஹீரோ. நாங்கள் அதற்கு பின்னணியில் தான் உள்ளோம்.

நடிகர் சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நல்ல கதை அமைந்தால் நிச்சயம் இணைந்து நடிப்பேன்.

தற்போது துப்பாக்கி என்ற படத்தில் நடித்து வருகிறேன். அதுவும் சிறப்பாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது," என்றார்.

விழாவில் மாநில ஒருங்கிணைப்பாளர் பிடி செல்வகுமார், ரசிகர்மன்ற மாவட்ட தலைவர் எஸ்.ஆர். தங்கப்பாண்டியன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Prithviraj is Back...

Prithviraj, who has not been in the limelight for quite sometime, is now back in action...and back with a smile too!

Though Prithviraj is one of the finest actors in the Malayalam film industry, he has become more popular for his outspoken and rash comments on people. Now, all that's old story.

Though Indian Rupee did well at the box office, it did not grab too many eyeballs. However, Prithviraj has his hands full this year. The actor has just finished shooting for Johnny Antony’s Masters and Dr Biju’s Akashathinte Niram, in which he will be doing a special appearance.

Apart from that, Prithviraj is also currently shooting for Diphan’s Hero. He also has Amal Neerad’s Bachelor Party, Shaji Kalias’ Simhasanam and Anurag Kashyap's Bollywood film Aiyya opposite Rani Mukherjee.

Prithviraj also dismissed rumours of having opted out of Mallu Singh citing date problems and being replaced by Unni Mukundan. Prithviraj also said that reports stating he has been thrown out of Rosshan Andrews’ Mumbai Police is baseless.

Fans of Prithviraj can now take a sigh of relief as there is a lot lined up for them by the superstar.

once again surya,vikram combination

Two of the stars of Tamil film industry are ready to clash on small-screen. The duo, who was seen together in award winning film Pithamagan, will be in the war of TRPs in the coming months. Yes, Vikram and Surya, the two actors known for varieties, will be hosting television game shows soon.

It is well-known that Surya is making his small-screen debut with Neengalum Vellalam Oru Kodi, the Tamil version of Kaun Banega Crorepati. Now, a popular channel has approached Vikram to host a similar kind of game show, which tests participant's general knowledge.

It is reported that Vikram, who is fully busy with his films, is keen to take up the project but the actor is not sure whether he can allot the required number of dates for the show and devote himself for the TV program.

Wednesday 8 February 2012

vijay's Thuppakki...

Thuppakki  is an upcoming Tamil action thriller film written and directed by A. R. Murugadoss the director of 7am arivu , which will star Vijay and Kajal Aggarwal. The film, featuring background score and soundtrack composed by Harris Jayaraj and cinematography handled by Santhosh Sivan is scheduled for a mid-2012 release.
According to early reports, filming was to commence at Thiruchendur and continue in Mumbai.Supposed to start on November 26, 2011, it began on 5 December in Mumbai. Vijay would appear in a completely different with a different hairstyle as well as a facial makeover. The first schedule that lasted for 35 days was completed by January 2012. The climax featuring a stunt sequence involving Vijay and 60 fighters was shot using nearly 7 cameras.
The distribution rights were bought by Gemini Film Circuit which produced and distributed Nanban. A dubbed same-titled Telugu version of the film is also expected to release simultaneously.This film will change vijay usual trend..

Its Going to be Another Milestone for Superstar Rajinikanth in Arasan(RANA)..

A new movie "Engal Arasan" - The Don stills were released last month that created a lot of hype and publicity noise in South India especially in TamilNadu. Most Popular Actor in  Indian cinema, Superstar Rajinikanth, is all over the posters of this movie. This movie was dubbed from an earlier Hindi film Rajinikanth did. The original Hindi movie "Khoon Ka Karz" was released 17 years ago in  March 1, 1991. A Rajinikanth movie is dubbed to Tamil after a decade and Rajinikanth in Arasan New Tamil Movie has all the ingredients a typical fan will look for in.
Superstar Rajinikanth's next movie is at least one year away - "Endiran" - The Robot is scheduled to be released in 2010. To satisfy fans in the meantime, producers have decided to release a dubbed movie at least.The Bollywood movie "Khoon Ka Karz" was a blockbuster and has multi-star cast in it. Not only have they dubbed it, they have also enhanced it digitally; the background score and the songs have been recreated and re-mixed in 5.1 DTS surround sound to give a complete entertaining masala movie. What a treat for an average moviegoer looking or some good entertainment.
The new Tamil movie Engal Arasan also has Bollywood stars Vinod Khanna, Sanjay Dutt, Kimi Katkar and Sangeeta Bijlani. Rajinikanth's role is significant in this movie as opposed some of the other movies he acted especially with Amitabh Bachchan. Superstar Rajnikanth shows up for more than 70 minutes in the new Tamil movie Arasan. The superstar has three fancy songs and three stunt sequences in it with a lot of his signature stylish gimmicks.

Surya next film Maatraan

Maatraan is an upcoming Tamil action thriller directed and co-written by K.V Anand and scripted by writers subha. It stars Suriya  who will portray five different roles, with Kajal Aggarwal playing the female lead and features music by Harris Jayaraj.
During the post-production stage of Ko, K. V. Anand announced that he would direct Suriya again after the success of Ayan, further noting that it would be produced by AGS Entertainment and would begin once Suriya finished shooting for A. R. Murugadoss' sci-fi thriller 7aum Arivu. Several actresses were considered including Taapsee Pannu, Samantha Ruth Prabhu, Sonakshi Sinha and Anushka Sharma, with Kajal Aggarwal eventually grabbing the role. Thara who played Karthik's sister in Agni Natchathiram was signed on to play Suriya's mother.
It was officially launched on July 22, 2011 in Chennai. The first schedule was held near the Pakistan border. In November 2011, the crew filmed a song in Latvia. A major portion of the film was shot in the Balkan region in countries like Russia, Croatia, Serbia, Albania and Macedonia Anand filmed the action sequences at the OMR in Chennai. The remaining portion is to be filmed in sets erected at Ramoji Film City in Hyderabad. In February 2012, the team left for US to shoot special effects scenes at the Stan Winston Studios.
Maatraan is touted to become Suriya's biggest release till date. The Telugu distribution rights were sold to Bellamkonda Suresh's Multi Dimensional Films for INR 17 crores. The film was scheduled for a Tamil New Year’s release, but due to delay the release date was pushed to June.

வயதில் பெரியவரான சல்மானை எப்படி திருமணம் செய்ய முடியும்: அசின்...!

என்னை விட வயதில் ரொம்ப பெரியவர் சல்மான் மான். அவரை எப்படி நான் திருமணம் செய்ய முடியும் என்று சல்மான் கான் உடனான திருமண வதந்திக்கு பதிலளித்திருக்கிறார் நடிகை அசின். தமிழில் முன்னணி நடிகையாக இருந்த அசின், கஜனி மூலம் இந்திக்கு போனார். முதல்படமே சூப்பர் ஹிட்டாக அங்கேயே டேரா போட்டார். தொடர்ந்து சல்மான் கானுடன் லண்டன் ட்ரீம்ஸ், ரெடி உள்ளிட்ட படங்களில் நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாகவும் இந்தி படவுலகில் அவ்வப்போது அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜெனிலியா-ரித்தேஷ் திருமணத்தை தொடர்ந்து, சல்மான்கானுக்கும் அசினுக்கும் திருமணம் நடக்கப்போவதாக இந்தி பட உலகில் தகவல் பரவியிருக்கிறது. இதற்கு மறுப்பு தெரிவித்து நடிகை அசின் பேட்டியளித்துள்ளார். அதில் சினிமாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சல்மான் கானும் ஒருவர். அவருக்கும் எனக்கும் காதல் ஏதும் கிடையாது. வெறும் நட்பு மட்டும் தான். நிச்சயமாக அவரை நான் திருமணம் செய்ய மாட்டேன். காரணம் அவர் என்னை விட வயதில் ரொம்ப பெரியவர். அதுமட்டுமல்ல நான் கேரளாவை சேர்ந்தவள். அங்குள்ள பழக்க வழக்கங்களை பின்பற்றும் குடும்பத்தில் பிறந்தவள். எனவே எங்களது குடும்ப சம்பிரதாயப்படி தான் என்னுடைய திருமணம் நடக்கும். இப்போதைக்கு சினிமா மட்டும், திருமணத்திற்கு இன்னும் நான்கு ஆண்டுகள் ஆகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அனன்யாவுக்கும நிச்சயதார்த்தம்.....

நாடோடிகள் படம் மூலம் அறிமுகமான நடிகை அனன்யாவுக்கும், அவரது தீவிர ரசிகரும் தொழிலதிபருமான ஆஞ்சநேயாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.

நான்கு ஆண்டுகளுக்கு முன் மலையாளத்தில் அறிமுகமானவர் நடிகை அனன்யா. திருச்சூரைச் சேர்ந்தவர். சமீபத்தில் வெளியான எங்கேயும் எப்போதும் படத்தின் வெற்றி மூலம், தமிழில் இவருக்கு நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

இந்த நேரத்தில் கேராளவை சேர்ந்த தொழில் அதிபர் ஆஞ்சநேயனுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. அனன்யாவின் தீவிர ரசிகராக ஆஞ்சநேயன் தினமும் அவரை பின்தொடர்நது சென்று காதலை வெளிப்படுத்தி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்துள்ளார்.

அனன்யா-ஆஞ்சநேயன் திருமண நிச்சயதார்த்தம் கேரள மாநிலம் திருச்சூரில் நடந்தது. நெருங்கிய உறவினர்கள் மட்டும் இதில் பங்கேற்றனர்.

திருமணம் விரைவில் நடக்க உள்ளது. மலையாளம் மற்றும் தமிழில் ஓரளவு படங்களை கையில் வைத்துள்ளார் அனன்யா. திருமணத்துக்கு பின்னும் சினிமாவில் நடிக்கப் போவதாக கூறியுள்ளார்.
   
 

வயசான ஹீரோவாக இருந்தாலும் பரவாயில்லை...

வயசான ஹீரோவாக இருந்தாலும் பரவாயில்லை... நான் நடிக்க ரெடி என்று - த்ரிஷா.

ஒரு காலத்தில் இளம் ஹீரோக்களுடன் மட்டும்தான் ஜோடியாக நடிப்பேன், ரஜினி - கமல் மட்டும் விதிவிலக்கு என்று கூறிவந்தார் த்ரிஷா.

இதனால் த்ரிஷாவுடன் ஜோடி சேர ஆசைப்பட்ட விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ் (அவங்களுக்கும் ஆசை இருக்காதா பின்னே) போன்றவர்கள், தங்களுக்கேற்ற இளம் நாயகிகளை தேட வேண்டி வந்தது. விஜயகாந்த் புதிது புதிதாக நாயகிகளை கொண்டுவந்தார்.

இப்போது த்ரிஷாவுக்கும வயசாகிவிட்டது!! விளைவு... தன் பாலிசியைத் தளர்த்திக் கொண்டுள்ளார்.

"எந்த வயசா இருந்தாலும் பரவால்ல... கதையும் என் கேரக்டரும் நல்லாருந்தா, ஜோடியாக நடிக்க நான் ரெடி. என்னை விட வயது குறைவான ஹீரோ, வயசான ஹீரோ என எந்த பேதமும் இல்லை," என்று கூறியுள்ளார்.

ரஜினி எழுதிய சுயசரிதை இன்னும் வெளியாகாதது ஏன்? - அவரே சொன்ன சுவாரஸ்ய தகவல்

தனது சுயசரிதையின் ஒரு பகுதியை எழுதி முடித்த பிறகும் அதை இன்னும் வெளியிடாமல் உள்ளதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

கனடா நாட்டின் 'இயல் விருது' பெற்றதற்காக எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணனுக்கு உயிர்மைப் பதிப்பகம் நடத்திய பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

வந்திருந்த பாமர ரசிகனிலிருந்து மெத்தப் படித்த அறிவு ஜீவிகள் வரை அவரது பேச்சைக் கேட்டு பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

விழாவில் ரஜினி பேசியது:

என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களே- இந்த விழாவின் நாயகர் என் நண்பர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களே, அனைவருக்கும் அன்பான வணக்கம்.

நேற்று என் நண்பர் ஒருவர் என்னைச் சந்தித்தபோது, என்ன ரஜினி காலம் ரொம்ப கெட்டுப் போச்சு... பொய்யெல்லாம் சொல்லிப் பேசுவாங்க... ஆனா பொ்யா போஸ்டர்லாம் அடிக்கிறாங்களே..? ன்னு ஆரம்பிச்சார்.

அப்படியா என்ன சமாச்சாரம்?ன்னேன்.

இல்ல... ஏதோ ஒரு எழுத்தாளருக்கு பாராட்டு விழாவாம்... அதுல நீங்க கலந்துக்கறீங்கன்னு போஸ்டர் அடிச்சிருக்காங்க..? ன்னார்.

இல்லப்பா நான் கலந்துக்கறேன்... ன்னு சொன்னேன் நான். அவருக்கு ஆச்சர்யம்!

ஆக்சுவலா, எனக்கே இது ஆச்சர்யம். ஒரு எழுத்தாளர் என் நண்பர். அவருக்கு ஒரு பாராட்டு. அதுக்கு நான் வந்து பாராட்டறேன். அதும் இந்த மாதிரி ஒரு சபையில அப்படீங்கறது... எனக்கு சந்தோஷம்... ஆச்சர்யம், அதே நேரம் பயமும்கூட.

ஏன்னா, இந்த சபையே வந்து... நான் பார்த்த விழாக்களோ இல்ல சபைகளோ இல்ல சந்திச்ச கூட்டங்களோ, அது வேற. ஆனா இங்க எல்லாமே அறிவுஜீவிகள். இங்க உட்கார்ந்த உடனே எஸ் ராமகிருஷ்ணன் வேற சொன்னாங்க. எல்லாருமே பெரிய பெரிய எழுத்தாளர்கள்லாம் வந்திருக்காங்க... மீடியாவிலிருந்து பெரிய பெரிய ஆளுங்கள்லாம் வந்திருக்காங்க. இங்க இருக்கிறவங்க பத்தில்லாம் நான் கேள்விப்பட்டிருக்கேன். இதுக்கப்புறம் என்னமோ லாஸ்ட்ல வந்து பேச சொல்றாங்க... நான் என்னத்தப் பண்ணப்போறேன்...

பேசும் போது வரும் குழப்பம்...

அதுல்லாம எனக்கு ஒரு வீக்னஸ் இருக்கு. இந்த பரசுராமர் கர்ணனுக்கு கொடுத்த சாபம் மாதிரி. கர்ணன் வந்து பிராமணன்னு பொய் சொல்லி வித்தைக் கத்துக்கிட்டு, அவன் சத்ரியன் தெரிஞ்சதும், பரசுராமர் கர்ணனுக்கு ஒரு சாபம் கொடுத்துடறார். மிகுந்த நெருக்கடியான நேரத்துல நான் சொல்லிக்கொடுத்த அஸ்திரங்கள் மந்திரங்கள்லாம் மறந்து போகணும் அப்டீன்னு. அந்த மாதிரி எனக்கு ஒரு சபை, மீட்டிங்ல மைக் முன்னாடி நின்னா உனக்கு தெரிஞ்ச தமிழ் வார்த்தைகள் எல்லாம் வரக்கூடாது மறந்துடனும்னு யாரோ சாபம் கொடுத்த மாதிரிதான் எனக்கு ஆயிடறது.

பேசும்போது என்னன்னு ஒரு குழப்பம்... பல லாங்குவேஜ் வேற தெரியுமா...எந்த லாங்வேஜும் சரியா தெரியாது.. ரொம்ப குழப்பமாயிடும். இது தமிழா தெலுங்கா கன்னடமா என்னான்னு தெரியாது. சரி பொதுவா இங்கிலீஷ்ல அடிச்சி விட்டுடலாம்னு நினைச்சா... அதுல கொஞ்சம் கொஞ்சம் வீக்குதான்... ஹாஹாஹா!

ஆக, இங்க பேசறவங்கெல்லாம் வந்து, ஒரு சரளமா லாங்குவேஜுக்காக ஒரு விஷயம் இருக்கும்.. அதை வெச்சிப் பேசும்போது, லாங்வேஜ் வந்து ஒரு இடையூறா இருக்காம ப்ளஸ்ஸா இருக்கும். நமக்கு அதுவே மைனஸா இருக்கும் போது, அந்த ப்ளோவே போயிடுது.

ஏன் இந்தப் பாராட்டு விழா?

எனி வே... இப்போ ராமகிருஷ்ணன் வந்து எப்படி எனக்கு நண்பரானார் அப்படின்னு சொல்றதுக்கு முன்னால... எனக்கு உடம்பு சரியாகி, மெட்ராஸ் வந்த பிறகு, நிறையப் பேர், நம்ம முத்துராமன் சார் உள்பட, வந்து பார்க்கணும் வந்து பாக்கணுனு சொல்லும்போது, நானே வேண்டாம்னு சொன்னேன். ஏன்னா வீட்லயே உட்கார்ந்து நான் என்ன பண்ணப் போறேன். நானே வர்றேன்னு சொல்லி அவாய்ட் பண்ணேன்.

நான் குணமடைஞ்ச பிறகு நானே ராமகிருஷ்ணனுக்கு போன் பண்ணேன். அவர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு இடத்திலிருந்தார். ஒரு முறை ரஷ்யாவில இருக்கேன்னு சொன்னார்.. ஒரு முறை ராமேஸ்வரத்தில் இருக்கேன்னார். அதுக்கப்புறம் ஒரு ஏழுநாளைக்கு முன்னால நான் சென்னையில இருக்கேன்னு சொன்னார். நான் வந்து அவர் வீட்டுக்குப் போய், அவரை பிக்கப் பண்ணிக்கிட்டு, அப்படியே சென்னையையெல்லாம் காரில் ஒரு ரவுண்ட் அடிச்சி, அரசியல், சினிமா, கலை, புத்தகங்கள்லருந்து எல்லா விஷயமும் பேசிட்டு, ராகவந்திரா மடத்துக்குப் போய் சாப்பிட்டுவிட்டு போவது வழக்கம்.

அப்ப நான் கேட்டேன், இந்த மாதிரி விருது கிடைச்சிருக்காமேன்னு. ஆமா கிடைச்சிருக்குன்னாரு. உடனே வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு, 'இவ்வளவு பெரிய விருது கிடைச்சிருக்கே, யாருக்குமே தெரியலியே அது. எப்டி அது எனக்கு தெரியாம போச்சு... எதுவும் விழா எடுக்கலையா'ன்னு கேட்டேன். 'இல்ல இல்ல ஒண்ணும் பண்ணல.. நீங்க வந்தா செய்யறேன்'னார். நான் சரின்னு சொன்னேன். அப்டிதான் இந்த விழா நடந்தது. இதில் கலந்துகிட்டதில் எனக்கு மிக்க சந்தோஷம்.

பாபா படப்பிடிப்பின்போது...

ராமகிருஷ்ணனை எனக்கு பத்து வருஷம் முன்னாடி, அதாவது 2002 லன்னு நெனக்கிறேன். அப்ப வந்து பாபா படம் எடுக்கணும்னு நான் முடிவு பண்ணபோது, நானே அந்தப் படத்துக்கு கதாசிரியர். கதையை நான்தான் எழுதினேன். அதுல வந்து ஒரு சீக்வென்ஸ் இருந்தது... சொர்க்கத்தை காண்பிக்கறது. அப்கோர்ஸ், அது படத்தில இல்ல. எடுக்கல அதை. நரகத்தை வந்து விஷுவலைஸ் பண்ணலாம்... இமாஜின் பண்ணலாம். ஆனா சொர்க்கத்தை எப்படிக் காட்டறது? அது ரொம்ப கஷ்டமா இருந்தது. எழுத்தாளர் சுஜாதாகிட்ட நான் கேட்டேன். ரஜினி அது எனக்கும் கூட கஷ்டமான விஷயம்தான். ஷங்கர் கிட்ட ஒரு பையன் இருக்கான். ராமகிருஷ்ணன்னு சொல்லிட்டு. அவன் ரொம்ப அறிவாளி. நெறைய விஷயம் தெரியும், அவனை நீங்க கான்டாக்ட் பண்ணுங்கன்னார்.

அதுக்கப்புறம் ஷங்கரை நான் மீட் பண்ணேன். ஷங்கர் சொன்னாங்க, 'ராமகிருஷ்ணனுக்கு ரொம்ப விஷயம் தெரியும் சார். அப்படியே அள்ளி வீசுறாரு. நாமதான் எடுத்துக்கணும்'னாரு. அதன் பிறகு ராமகிருஷ்ணனை அறிமுகப்படுத்தினார். பேசினேன். அப்படி பேசின பிறகு, அவர் சொன்ன சில விஷயங்கள்லாம் கேட்டு நான் பிரமிச்சுப் போனேன். நான் கேள்விப்படாதது, பார்க்காதது, படிக்காததுன்னு பல விஷயங்களை அவர் சொன்னார். இவ்வளவு சின்ன வயசுல இவ்வளவு விஷயங்கள் தெரிஞ்சிருக்காரேன்னு நான் ஆச்சர்யப்பட்டேன். அந்த நட்பு அப்படியே ஆழமான பிறகு, ரொம்ப பர்சனலா ஆன பிறகு, அந்த பாபா படம் ரிலீஸ் ஆகி, அதுக்கப்புறம், பாபாவிலருந்து சந்திரமுகி வரைக்கும் அது ஒரு சின்ன காலகட்டம்... என் வாழ்க்கையில அது ஒரு மறக்கமுடியாத காலம்.

எப்பவும் கஷ்டம் வரும்போதுதான் நிறைய விஷயங்கள் நமக்குத் தெரியும். சந்தோஷமா இருக்கும்போது ஒண்ணுமே தெரியறதில்ல. யோசிக்கிற சக்தியே துன்பங்க்கள் வரும்போதுதான் வரும். மூளைக்கு வந்து வேலை கொடுக்கற மாதிரி.

ஸோ... பாபாவிலருந்து சந்திரமுகி வரைக்கும் நடந்த சம்பவங்கள், விஷயங்கள் எனக்கே வந்து ஒரு நல்ல அனுபவம்தான். அப்ப வந்து அது கஷ்டமா இருந்தது. ஆனா பின்னாடி, நான் அதை நினைச்சி ரசிக்க ஆரம்பிச்சேன்.

அதை வந்து ஒரு தொடரா, ஒரு ஆட்டோபயாக்ரபி மாதிரி எழுதுனா எப்படியிருக்கும்னு சொல்லி அவர்கிட்ட கேட்டேன். அவரும் முயற்சி பண்றேன் சார்னார்.

ஏன்னா.. எனக்கு தமிழ் எழுத தெரியாது (அதாவது புத்தகம் எழுதுகிற அளவுக்கு இலக்கியத் தமிழ்). இங்கிலீஷ்ல அவ்வளவு ப்ளூயன்ஸி கிடையாது. கனடா மறந்து போய்ட்டேன். எழுதறது மறந்து போய்ட்டேன். சரி, ராமகிருஷ்ணன், நான் சொல்றேன். அதை நீங்க எழுதிட்டு வாங்க. கரெக்ஷன் பார்த்துட்டு அந்த புக்கை ரிலீஸ் பண்ணலாம்னு நினைச்சேன். இந்த புக் யாருக்கும் மனசு நோகற மாதிரியில்ல. அதாவது என்னுடைய மனநிலையில எது எப்படி இருந்ததுன்னு சொல்றதுக்காக. யாரையும் தப்பு சொல்றதுக்காக இல்ல.

திருப்பதில என் நண்பரோட பண்ணை வீட்ல ஒரு பத்துப் பனிரெண்டு நாள் நான் சொல்லி அவர் எழுதி, ஒரு பதினைஞ்சி நாளைக்கப்புறம் அதை என்கிட்ட காண்பிச்சார். மிக அருமையாக வந்திருந்தது.

ஆனா, உண்மை இருந்ததினால, சில பேருக்கு டெபனிட்லி அது நோகடிக்கும். ஸோ, அதை கண்டிப்பா பேப்பர்ல போட்டு, காண்ட்ராவர்சியாகி, அதுக்கு பதில் சொல்லி... அதனால இப்ப அது வேண்டாம். அதை அப்படியே வெச்சிட்டு, நாம கொஞ்ச நாள் கழிச்சி நேரம் வரும்போது ரிலீஸ் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டு, அந்த வேலைக்கு அவருக்கு பணம் எவ்வளவு தரலாம்னு கேட்டேன்.

உடனே அவர் நீங்க எனக்கு பணம் கொடுத்தா அவமானப்படுத்தற மாதிரி. தயவு செஞ்சி இனி அதைப்பத்தி பேசாதீங்கன்னு சொல்லிட்டார்.

ஹிஸ்டரி என்பது என்ன?

இப்ப அவர் நல்ல வசதியா இருக்காரு. ஆனா அப்போ அவர் கொஞ்சம் கஷ்டப்படற டைம். அவர் வந்து என்னைப் பாத்து, ரொம்ப ஆச்சர்யப்பட்டாரு. இவ்வளவு பேரு, பணம், புகழ் இருந்தும் எளிமையா இருக்காரேன்னு சொல்லி. நான் அவரைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். வசதி இல்லேன்னாலும் ஒரு குடும்பம் இருந்தும் கூட, அதைப் பத்தி கொஞ்சம் கூட கவலைப்படாம, எழுத்து எழுத்து எழுத்து, படிக்கிறது எந்த விஷயமா இருந்தாலும் - அவர் கூட நான் திருப்பதி போயிருக்கேன், கர்நாடகா போயிருக்கேன், ஆந்திரா போயிருக்கேன், நிறைய இடங்கள்ல சுத்தியிருக்கேன்.

அவர் பார்க்கறது.. அந்த த்ருஷ்டி... யதா த்ருஷ்டி ததா சிருஷ்டின்னு சொல்லுவாங்க... கம்ப்ளீட்டா.. ஒருத்தர பாக்கும்போது, ஹிஸ் ஸ்டோரி ஈஸ் எ ஹிஸ்டரி. ஹிஸ்டரின்னா ஹிஸ் ஸ்டோரி. ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஹிஸ்டரி இருக்கு.

ஒருத்தரப் பாக்கும்போது, அவர் தொடர்பான சம்பவங்கள் இப்படி இருக்கலாம்... இவன் ஏன் இப்படி சைலன்டா இருக்கான்... சின்னச் சின்ன விஷயங்களைக் கூட கதையா பண்றார். வாழ்க்கையை அப்படியே ரசிக்கிறார், ஒரு மூணு வயசு குழந்தை மாதிரி.

அந்த 'ஓ' என்கிற ஆச்சர்யமிருக்கே... வயசான பிறகு நமக்கு எல்லாமே மரத்துப்போகுது. இதானே எல்லாமே பாத்துட்டோம்... எல்லாமே தெரிஞ்சிக்கிட்டோம்னு லைப்பே போரடிச்சிப் போகுது. பட், அவுக்கு சின்னச் சின்ன விஷயம் கூட அவ்வளவு இன்ட்ரஸ்டிங்கா இருக்கு. அவரால வந்து ரசிக்க முடியுது. அந்த ரசிக்கிறத அப்டியே அழகாக பேனா மூலம் பேப்பரில் எழுத முடிகிறது. இமாஜின் விஷுவலைஸ் பண்ண முடிகிறது. நல்ல விஷயங்களை புதுசு புதுசா தமிழ் மக்களுக்கு கொடுக்கணுங்கற ஆர்வம் இருக்கு.

தாஸ்தாயேவ்ஸ்கியிருந்து, ஷேக்ஸ்பியரிலிருந்து, ப்ரெஞ்சில் பெரிய பெரிய எழுத்தாளர்களின் புத்தகங்களையெல்லாம் மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கார். எத்தனை பேர் படிச்சிருக்கீங்களோ தெரியாது. நிஜமா சொல்றேன்.. இந்த யங்க்ஸடர்ஸுக்கு அது நல்ல விஷயம்.

நான் படிக்காதவன்... ஆனா படிச்சவன்!

நான் எஸ்எஸ்எல்சிதான். அகாடமிக், பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி, மேதமேடிக்ஸ் படிச்சதெல்லாம் கம்மிதான். ஆனா எனக்கு படிப்பு ரொம்ப ரொம்ப ஹெல்ப் பண்ணியிருக்கு. இப்பவும் ஹெல்ப் பண்ணிட்டிருக்கு. கண்டிப்பா இளைஞர்கள் படிக்கணும். இப்ப அந்த புத்தக கண்காட்சியில வருஷா வருஷம் விற்பனை அதிகமாகி, நிறைய பேர் வர்றாங்கன்ணு கேள்விப்பட்டப்போ, எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது. ரியலி...

பாட்டில் சத்தமல்ல... புத்தக சத்தம்!

ஒரு பதினைஞ்சி வருஷத்துக்கு முன்னாடி டொமஸ்டிக் ப்ளைட்ல மது அருந்தறது - இப்ப கட் பண்ணிட்டாங்க - இருந்தப்போ, நைட் பத்துமணிக்கு மேல டேக் ஆப் ஆனதும், நீங்க ரிலாக்ஸ் ஆகலாம்னு சொன்ன உடனே, எல்லாம் டக் டக்னு சவுண்ட் வரும். எல்லாம் பாட்டிலு, சோடாதான் எடுப்பாங்க.

ஏர் ஹோஸ்டஸ்கள் ஐஸ், கிளாஸுன்னு பிஸியா போயிட்டே இருப்பாங்க. அதே பாரின்ல பாத்திங்கன்னா டக் டக்குன்னு சத்தம் வரும்... புத்தகங்களை எடுப்பாங்க. படிக்கிறதுக்கு சிந்திக்கிறதுக்கு புத்தகங்களை எடுப்பாங்க.

புத்தகங்கள் எப்படின்னா... இப்போ விஷுவலைஸா நீங்க பாத்தீங்கன்னா, ஒரு டைரக்டர் ஒரு பிக்சரை காண்பிக்கிறார்னா, அந்த டைரக்டர் அவர் பார்வையில் அதை எப்படி விஸுவலைஸ் பண்ணாரோ அதைத்தான் நீங்க பார்க்க முடியும். ஆனா, நீங்க விஷுவலைஸ் பண்ண ஆரம்பிச்சிங்கன்னா.. நீங்களே ஒவ்வொரு காட்சியையும் உங்க மனசுக்குள்ள படமாகப் பார்க்க முடியும். படிக்கிறதுல அவ்வளவு சுகம், ஆனந்தம் இருக்கு.

சுவாமி விவேகானந்தர்

ஒரே ஒரு ஸ்பீச்.. நரேந்திரன்.. சுவாமி விவேகானந்தா. அவருடைய ஒரே ஒரு ஸ்பீச் அப்படியே உலகத்தையே மாத்திடுச்சி. அதன் பிறகுதான் கல்கத்தாவில் அவருக்கு மரியாதையே வந்தது. எப்படி ரபீந்திரநாத் தாகூருக்கு நோபல் பரிசு வந்த பிறகுதான் கல்கத்தாவிலேயே அவரை அடையாளம் கண்டுகொண்டார்களோ அப்படி...

அந்த மாதிரி இப்ப கனடாவிலிருந்து அவார்ட் கொடுத்திருக்காங்க. நிஜமா மிக மிக சந்தோஷமான விஷயம். ராமகிருஷ்ணனுக்கு இன்னும் வயதிருக்கிறது. இன்னும் அவர் நிறைய எழுதி தமிழ் மக்களுக்கு நன்மை சேர்க்க வாழ்த்துகிறேன்," என்றார்.

சிம்பு, பிரபுதேவா,அடுத்தது? நயன்தாரா உறவினர்கள் புலம்பல்!!!


முதலில் சிம்புவை நம்பி ஏமாந்த நயன்தாரா, இப்போது பிரபுதேவாவையும் நம்பி ஏமாந்துவிட்டாள் என்று நயன்தாராவின் உறவினர்கள் புலம்பி வருகின்றனர். சிம்பு உடனான காதல் முறிவுக்கு பின்னர் பிரபுதேவாவுடன் காதல் வயப்பட்டார் நயன்தாரா. நயன்தாராவுக்காக முதல் மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. அதேபோல் பிரபுதேவாவுக்காக இந்து மதத்துக்கு மாறினார் நயன்தாரா. அதைவிட கல்யாணம் பண்ணா‌மலேயே இருவரும் சிறந்த தம்பதிகள் பட்டம் எல்லாம் வாங்கினர். அப்படி ஈருடல் ஓருயிராக இருந்த வந்த இருவரும், இப்போது பிரிந்து விட்டனர். நயன்தாரா மீண்டும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
இந்நிலையில் நயன்தாராவின் இந்த நிலைமையை பார்த்து அவரது சித்தி, சித்தப்பா ஆகியோர் புலம்பி வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, நயன்தாராவின் நிலைமையை பார்க்கும் போது ரொம்ப வருத்தமாக இருக்கிறது. நாங்கள் தூக்கி வளர்த்த பெண் நய‌ன்தாரா. இன்று அவளுக்கு இப்படி ஒரு நிலைமையாகும் என்று நாங்கள் நினைத்து கூட பார்க்கவில்லை. நயன்தாரா பிடிவாதக்காரி என்று எல்லோரும் சொல்கின்றனர். அவள் பிடிவாதக்காரியல்ல, ரொம்ப வெகுளி பெண்.
சிம்புவிற்காக வல்லவன் படத்திற்கு நயன்தாரா பண உதவி எல்லாம் செய்தாள். கடைசியில் சிம்புவை நம்பி ஏமாந்து போனாள். அடுத்து பிரபுதேவாவை நம்பி போனாள். இனியாவது அவள் வாழ்வில் சந்தோஷம் இருக்கும் என்று எதிர்பார்த்தோம். பிரபுதேவாவை ரொம்ப நம்பினாள் நயன்தாரா. கடைசியில் பிரபுதேவாவிடமும் ஏமாந்து போனாள். ரமலத்-பிரபுதேவா விவாகரத்து உள்பட பல விஷயங்களுக்கு பிரபுதேவாவுக்கு பண உதவி செய்தவர் நயன்தாரா தான். அவர்களுக்கு பணம்தான் முக்கியமாக இருந்ததே தவிர நயன்தாராவின் பாசம் அல்ல. நயன்தாரா இனி மேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று சொன்னதுதான் அவர்களுக்கு ஏமாற்றமாக இருந்து இருக்கும். கடைசியில் அவளிடமிருந்‌த எல்லா பணத்தையும் சுரண்டி விட்டு, இப்போது அவளையும் கழற்றி விட்டு விட்டார்கள். சினிமாவை மட்டும் நயன்தாரா விட்டுவிட்டு வந்தால் நாங்களே அவளுக்கு நல்ல பையனாக பார்த்து திருமணம் செய்து வைக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் வருத்தத்துடன் கூறியுள்ளனர்.

இனி இல்லை ரீமேக்...

சென்னை: இனி ரீமேக் படங்களை எடுக்கவே மாட்டேன். நண்பன்தான் எனது கடைசி ரீமேக் படம். இனிவரும் படங்களை ஒரிஜினலாகவே எடுப்பேன், என்று கூறியுள்ளார் இயக்குநர் ஷங்கர்.

ரஜினியின் எந்திரன் என்ற மெகா வெற்றிக்குப் பிறகு ஷங்கர் விஜய்-ஜீவா-ஸ்ரீகாந்தை வைத்து இயக்கிய படம் 'நண்பன்'.

பொங்கலுக்கு ரிலீசான இந்தப் படம் நகர்ப்புறங்களில் பரவாயில்லை எனும் அளவுக்கு ஓடினாலும், கிராமம் சார்ந்த பகுதிகளில் பெரிதாகப் போகவில்லை. இதன் தெலுங்குப் பதிப்புக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்துள்ளன. ஆந்திராவில் பெரும்பாலானோர், இந்தப் படத்தின் ஒரிஜினல் இந்திப் பதிப்பான 3 இடியட்ஸைப் பார்த்துவிட்டதால், இந்த 'சினேகிதடு' தங்களைக் கவரவில்லை என்று கூறியுள்ளனர்.

இந்த நிலையில் தனது அடுத்த படம் குறித்து பேச ஆரம்பித்துள்ளார் ஷங்கர்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், "நண்பன் படம் இந்தியிலிருந்து அப்படியே எந்தக் காட்சியும் மாறாமல் ரீமேக் செய்ப்பட்டது. 3 இடிட்ஸையும் மாற்றக்கூடாது, அதேநேரம் ஒரிஜினல் படத்தில் இருந்த உணர்வும் வேண்டும் என்பதால் நிறைய சவால் இருந்தது எனக்கு.

விஜய்யை அவரது வழக்கமான பாணியிலிருந்து மாற்ற முயற்சித்தேன். '3 இடியட்ஸ்' படத்தை விடவும் பாடல்கள் இதில் நன்றாக இருந்ததாக பாராட்டினார்கள். ரீமேக் படத்தை இயக்கியது எனக்கு புது அனுபவமாக இருந்தது. 3 இடியட்ஸ் இயக்குநர் ராஜ்குமார் ஹிராணி கூட நண்பனை பாராட்டினார்.

ஆனால் இனி ஒருபோதும் ரீமேக் படங்களை இயக்கமாட்டேன். நண்பன்தான் அந்த வகையில் முதலும் கடைசியுமான ரீமேக்.

சொந்தத் தயாரிப்புகள்...

நான் தயாரித்த பல படங்கள் நன்றாக ஓடவில்லை. இதனால் நிறைய பணத்தை இழந்துவிட்டேன். நானே என் கை காலை சுட்டுக்கொண்டேன். அவற்றில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறேன். அடுத்து தயாரிப்பதற்காக நல்ல கதையை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

Tuesday 7 February 2012

கமலின் தலைவன் இருக்கின்றானில் ஜாக்கி சான்?

ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் உலக நாயகன் கமல் ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகின்றது.

ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் பெயரைச் சொன்னாலே குட்டீஸ் எல்லாம் ஆ, ஊ என்று ஆரம்பித்துவிடுவார்கள். அவர் தனது நடிப்பால் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் இதுவரை ஹாலிவுட் மற்றும் சீன படங்களில் நடித்த ஜாக்கி சான் முதன்முறையாக கோலிவுட்டில் நடிக்கிறார். கமல் தலைவன் இருக்கின்றான் என்ற படத்தை இயக்குகிறார் அல்லவா. அதில் நடிக்குமாறு கமல் ஜாக்கியை அணுகியுள்ளார். அவர் ஒப்புக் கொண்டாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. மேலும் அவருக்கு என்ன மாதிரி கதாபாத்திரம் என்ற தகவலையும் கமல் கசிய விடவில்லை.

தசாவதாரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு ஜாக்கி சான் வந்தார் என்பது நினைவிருக்கலாம். அந்த விழாவில் அவர் கமல் ஹாசனின் நடிப்பை மனதாரப் பாராட்டினார்.

ஊழலை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்.